ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

நில மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியேவந்த ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். 

நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் கைதான ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் கடந்த 28ம் தேதி ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சம்பாய் சோரன் இல்லத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ஜேஎம்எம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். ஆளுநருடனான சந்திப்பின் போது ஹேமந்த் சோரனும் உடனிருந்தார். தொடர்ந்து தனது தலைமையிலான அரசு அமைய ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். இதையடுத்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

Night
Day