ஜார்க்கண்ட்: விரைவு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிழக்கு சிங்பூமில் உள்ள கம்ஹாரியா ரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மீது அந்த வழியாக வந்த கலிங்கா உத்கல் விரைவு ரயில் மோதியது. பலியானவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறியுள்ள அதிகாரிகள், இதுபோல் தண்டவாளத்தை கடக்கும் போது பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Night
Day