ஜிஎஸ்டி வரி வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை நிறுத்தியது மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜிஎஸ்டி வரி வசூல் மாதம் தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் ஜுன் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1 புள்ளி 74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, மே மாதம் கிடைத்த 1 புள்ளி 73 லட்சம் கோடி ரூபாயை காட்டிலும் அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டு ஜுன் மாதம் வசூலிக்கப்பட்ட 1 புள்ளி 61 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு மாதமும் வெளியிடுவதை நிறுத்தியிருக்கும் வேளையில், ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு குறித்த விபரம் அறிந்த வட்டாரங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

Night
Day