ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை இழந்தாலும் அனைவரும் வருத்தப்பட வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 2-ம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் முடிவடையும் நிலையில் டெல்லி மக்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறையிலிருக்கும் போது தன்னை பல வழிகளில் துன்புறுத்துவதாகவும், தனக்கு ஏதேனும் பெரிய நோய் உள்ளதா என மருத்துவர்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் சிறையிலிருந்தாலும் டெல்லியில் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என கூறியுள்ள கெஜ்ரிவால், தன் பெற்றோருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Night
Day