ஜெகநாதர் ரத யாத்திரை தொடக்கம் - பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் புனித ரத யாத்திரை தொடங்கும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திருவிழாக்களில் ஒன்றான ஜெகநாதர் ரத யாத்திரை ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், புனித ரத யாத்திரையின் தொடக்கத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், மகாபிரபு ஜெகநாதனை வணங்குவதாகவும், அவருடைய ஆசீர்வாதம் தொடர்ந்து இருக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அகமதாபாத்தில் உள்ள ஒரு கோயிலில் தனது மனைவியுடன் வழிபாடு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெய் ஜெகநாத், ஒவ்வொரு ஆண்டும்போல் இன்றும் ஸ்ரீ ஜெகநாத் மந்திரின் மங்கள ஆரத்தியில் பங்கேற்கும் அதிர்ஷடம் தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Night
Day