ஜெகன் மோகனுக்கு தெலுங்கு தேசம் கட்சி எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களை தாக்க வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்திருந்தால் ஜெகன் மோகன் இருந்திருக்க மாட்டார் என அக்கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டிய நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்களை தாக்கும் எண்ணம் தங்களுக்கு இருந்து இருந்தால், இந்த பதிவை நீங்கள் பதிவு செய்து இருக்க முடியாது என பகிரங்கமாக தெலுங்கு தேசம் கட்சி பதிவிட்டுள்ளது. மேலும், எப்போதும் திருந்த மாட்டீர்களா என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் அரசியல் பொய்யில் மூழ்கி உள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர். தொடர்ந்து, நிதானமாக அரசியல் செய்ய வேண்டுமென ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Night
Day