ஜெயிலுக்குள் மது, சிகரெட் - நடிகர் தர்ஷன் சுகபோக வாழ்க்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில், 7 சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், சிறைக்குள் நாற்காலியில் அமர்ந்து கையில் காபி மற்றும் சிகரெட் பிடித்தபடி 3 பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், சிறையில் இருந்து தர்ஷன் வீடியோ கால் பேசிய வீடியோவும் வெளியானது. இந்நிலையில், சிறைக்குள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தர்ஷனுக்கு சலுகை வழங்கிய 7 சிறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Night
Day