ஜே.எம்.எம். கட்சியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் பாஜக உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்ட் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சம்பாய் சோரன் சில எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. நேற்று டெல்லி சென்ற சம்பாய் சோரன், நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ச்சியான அவமதிப்பு காரணமாக தான் வேறு பாதையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்பாய் சோரனை வரவேற்பதாக ஜிதன் ராம் மஞ்சி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே குடும்பங்களையும் கட்சிகளையும் உடைக்கும் வேலையை பாஜகவினர் பார்ப்பதாக ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day