ஞானவாபியில் இந்துக்கள் வழிபட வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி இஸ்லாமியர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஞானவாபி மசூதியின் கீழ்தளத்தில் இந்துக்கள் பூஜை நடத்த கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் அலகாபாத் உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனு மீதான விசாரணையின் போது, மசூதி மீது தங்களுக்கே முழு உரிமை உள்ளது என்று இஸ்லாமியர்கள் தரப்பும், பூஜை செய்ய தங்களுக்கே உரிமை உள்ளது என்று இந்துக்கள் தரப்பும் வாதத்தை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Night
Day