டாஸ்மாக் வழக்கு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, இது தொடர்பான வழக்கில் சென்னை சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது. 

Night
Day