டிக்ராக்டர் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது மோதிய டிராக்டர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப்பில் டிராக்டர் பந்தயத்தில் பங்கேற்ற டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் பக்வாரா கிராமத்தில் டிராக்டர் பந்தயம் நடைபெற்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஒன்று, பார்வையாளர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து, 3 டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

varient
Night
Day