டெல்லியில் அடர்த்தியான மூடுபனி நிலவும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் குடியரசு தினமான இன்று அடர்த்தியான மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி வரை பார்வைத் தெளிவு மிகவும் குறைவாக இருக்கும் என்றும், இதனால் 400 மீட்டர் வரை மட்டுமே மக்கள் பார்க்க முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 10.30 மணிக்குப் பின்னரே பனி விலகும் என்றும் கூறியுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், குடியரசு தினத்தன்று குளிர் அதிகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

Night
Day