டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரசை ஒயிட்வாஷ் செய்த பாஜக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் மொத்தம் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை பாஜக ஒயிட் வாஷ் செய்தது.

டெல்லியில் கடந்த மே 25 ஆம் தேதி நடைபெற்ற 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 54.48 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜெஜ்ரிவால் கைது செய்யப்பட்டடார். அதேபோல்,  டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது அதிருப்தியில் இருந்தனர். மேலும், தண்ணீர் பஞ்சம் உள்ளிட்ட பிரச்சனைகளும் மக்களின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்தன. அதேபோல் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மீதும் மக்கள் கோபமடைந்ததால் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களித்தனர். இதன் காரணமாக டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை பாஜக வெயிட் வாஷ் செய்துள்ளது. 

Night
Day