டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மரக்கன்றுகளைac நட முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 4 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பதால் அம்மாநிலத்தில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ள காற்று மாசுபாட்டை குறைக்க காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 4 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகளை நட காற்று தர மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இயலும் என 

அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

Night
Day