டெல்லியில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக இடங்கள் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சாலையோர வியாபாரிகள் சுயமாக கடைகள் வைக்க ஏதுவாக, அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக இடங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் போலீஸ் போன்ற அதிகாரிகளுடன் எவ்வித இடையூறும் இல்லாமல், சுயமரியாதையுடன் வியாபாரிகள் வாழ்வதற்காக அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வியாபாரிகள் அனைவருக்கும் போதுமான அளவில் நிலங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Night
Day