டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் நயாப் சிங் சைனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இதில், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அவரே முதலமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரியாதை நிமித்தமாக நயாப் சிங் சைனி, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

Night
Day