டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி தங்களது கோரிக்கைகள் தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் ஷம்பு எல்லைப் பகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Night
Day