டெல்லி சட்டமன்ற தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்‍குப்பதிவு விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இன்று நடைபெறும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 634 வாக்‍காளர்கள் வாக்‍களிக்‍க தகுதி பெற்றுள்ளனர். டெல்லி முழுவதும் 150க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும், 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்‍கும் முனைப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்‍கும், 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க, கட்சிக்‍கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருகட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. வரும் 8ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறுகிறது.

Night
Day