டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி வெடி விபத்து - முதலமைச்சர் அதிஷி விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பப்ளிக் பள்ளிக்கு வெளியே நடந்த வெடிவிபத்துக்கு மத்திய அரசின் அலட்சியம்தான் காரணம் என முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். 

நாட்டின் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது பாஜக தலைமையிலான மத்திய அரசின் பொறுப்பு என்றும் காவல்துறை, நிலம் ஆகியவை அவர்கள் அதிகாரத்தின் கீழ்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டெல்லி அரசை சிக்கலில் ஆழ்த்த மட்டுமே 90 சதவீத அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கல்வி, சுகாதாரம், சாலைகள் போன்ற மாநில அரசின் வேலைகளில் தலையிடாமல், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிஷி வலியுறுத்தினார்.

Night
Day