டெல்லி விமான நிலைய முதல் முனையம் விமான சேவை தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சர்வதேச விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த முதல் முனையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் முதல் முனையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியான நிலையில், படுகாயமடைந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் சேதமடைந்தன. இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த முனையத்திலிருந்து விமான சேவை நிறுத்தப்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day