டெல்லி - சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்ம பொருள் வெடித்து சிதறிய காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியின் விஹார் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே நேற்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதில், அருகில் இருந்த கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன. கார்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார், பாதுகாப்புப்படையினர், இது குண்டுவெடிப்பு சம்பவமா? பயங்கரவாத தாக்குதலா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்வா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மப்பொருள் வெடித்து சிதறியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Night
Day