டெல்லி - 13 மருத்துவ மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - நடவடிக்கை எடுக்க செயலருக்‍கு பரிந்துரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் 13 மருத்துவ மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்‍குநரகம் டெல்லி சுகாதாரத்துறை செயலருக்‍கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி அரசு மருத்துவக்‍கல்லுரியில் படிக்‍கும் 13 மருத்துவ மாணவிகளிடம் உதவி பேராசிரியரான சாலிக்‍ ஷேக்‍ என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக பாதிக்‍கப்பட்ட மருத்துவ மாணவிகளின் புகாரின் பேரில் ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்‍குநரகம் விரிவான விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 
உதவி பேராசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்‍கை மேற்கொள்ளுமாறு ஊழல் கண்காணிப்பு இயக்‍குநரகம் டெல்லி சுகாதாரத்துறை செயலருக்‍கு பரிந்துரைத்துள்ளது.

Night
Day