டெல்லி : கூட்டணி குறித்து காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சி பேச்சவார்த்தை - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரசுடன் பேசி வருவதாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிப் பங்கீடு தருவதில் பிற கட்சிகள் சுணக்கம் காட்டி வருகின்றன. இதனால் இந்தியா கூட்டணி தடுமாற்றத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் கூட்டணி இல்லை என்பதற்காக காங்கிரசுடன் பகைமை இல்லை என்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி இல்லையென்றால், பா.ஜ.க. தேர்தலை எளிதில் எடுத்து கொள்ளும் என்பது தங்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

Night
Day