டெல்லி : புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு - வரும் 26-ம் தேதி ஆஜராக கவிதாவுக்கு சிபிஐ சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கை விவகாரத்தில் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதில் கவிதாவுக்கும் தொடர்புள்ளதாக இரு அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Night
Day