டெல்லி: அதிவேகமாக வந்த கார் சாலையோர உணவகத்திற்குள் புகுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் அதிவேகத்தில் ஓட்டி சென்ற கார் சாலையோர உணவகத்தில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 31ம் தேதி காஷ்மீர் கேட் பகுதியில் உணவகம் ஒன்று வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவகத்துக்குள் புகுந்தது. இதில், 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் பராக் மைனி என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day