டெல்லி: காவலர் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  380க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. வஜிராபாத்தில் காவலர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு எதிர்பாராதவிதமாக, திடீரென நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார், கொழுந்துவிட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் 180க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day