டெல்லி: குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து - 6 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் பிடம்புரா பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். முதல் மற்றும் 2-வது தளங்களில் தீப்பற்றியது தொடர்பாக தகவல் அறிந்து 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஜிதேந்திர மீனா தெரிவித்துள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். 

Night
Day