டெல்லி: தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை உதைத்த காவலர் பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் சாலையோரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி இந்தர் லோக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டனர். ஒரு கட்டத்தில் மசூதிக்குள் கூட்டம் நிரம்பியதால் வழிபாடு செய்ய பலருக்கு இடம் கிடைக்கவில்லை. தொழுதை தொடங்கிவிட்டதால் செய்வதறியாத இஸ்லாமியர்கள், மசூதிக்கு வெளியே சாலையோரம் 10 நிமிட வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், வழிபாடு செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Night
Day