தமிழச்சிக்கு நீதி கேட்ட திருச்சி சிவா

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பட்ஜெட்டிற்கு எதிரான போராட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா, தமிழகத்திற்கு நிதி வேண்டும் என கோஷமிடுவதற்கு பதிலாக தமிழச்சிக்கு நிதி வேண்டும் என கோஷம் எழுப்பியது முகசுளிப்பை ஏற்படுத்தியது.

2024-25 நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த மாநிலங்களுக்கு மட்டுமு் அதிக அளவிலான திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்பி திருச்சி சிவா, தமிழகத்திற்கு நிதி வேண்டும் என கோஷமிட்ட நிலையில், அருகில் நின்ற திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியனை கண்டதும் தமிழச்சி நிதி வேண்டும் என கோஷம் எழுப்பினார். இதனால் திமுகவினரின் போராட்டம் காமெடியில் முடிந்தது.

Night
Day