தமிழிசை சவுந்தரராஜனிடம் கோபப்பட்ட அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியது பேசு பொருளாகியுள்ளது. 

விஜயவாடாவில் உள்ள கேசரப்பள்ளி ஐ.டி.பார்க்கில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, விழா மேடைக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்து சென்றார். இந்நிலையில், அமித் ஷா அவரை அழைத்து ஒரு  சில நிமிடம் பேசினார். அந்த, காட்சிகள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது. அமித் ஷா அவரிடம் என்ன பேசினார் என்பதற்கான காரணம் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தால் மட்டுமே வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Night
Day