தர்ணா போராட்டத்தை தொடங்கினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்துக்‍கு மத்திய அரசு தர வேண்டிய 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க கோரி அம்மாநில முதலமைச்சரும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மேற்கு வங்கத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறி இருந்தார். இந்த​ நிலையில், மத்திய அரசு நிலுவை தொகையை விரைவில் தரக்‍கோரி கொல்கத்தா நகரில் உள்ள ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.

Night
Day