தலைமறைவாக இருந்த சிவசேனா தலைவரின் மகன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெண்மணி மீது சொகுசு கார் ஏற்றி கொன்ற விவகராத்தில், தலைமறைவாக இருந்த சிவசேனா தலைவரின் மகன் கைது செய்யப்பட்டார். கடந்த 7ம் தேதி மும்பையின் வோர்லி பகுதியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில், நாக்வா என்ற பெண்மணி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷா, அவரது நண்பருடன் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில், நண்பரின் செல்ஃபோனை ட்ராக் செய்ததன் மூலம் தானேவில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தலைமறைவாக இருந்த மிகிர்ஷாவை போலீசார் கைது செய்தனர். 

Night
Day