தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய அசாம் சிறுமி - விசாகப்பட்டினத்தில் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாயமான அசாம் சிறுமி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசைன் என்பவர் குடும்பத்துடன் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய 13 வயது மகள் தஸ்மீன் பேகம் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சண்டையிட்டதால் தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானதால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சி மூலம் சிறுமி கன்னியாகுமரி நோக்கி ரயிலில் புறப்பட்டதாக கண்டறியப்பட்ட நிலையில், கேரள போலீசார் கன்னியாகுமரியில் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுமி விசாகப்பட்டிணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day