திகார் சிறை தாதாவுக்கும் பெண் தாதாவுக்கும் காதல் திருமணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் தாதாக்களுக்கிடையேயான காதல் திருமணம் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. டெல்லியில் தாதாவாக வலம் வரும் காலா ஜத்தேடியும், பெண் தாதாவான அனுராதா சவுத்ரியும் நீண்ட நாள்களாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய காலா ஜத்தேடி தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காதல் திருமணத்துக்காக பரோலில் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 200 போலீசார் பாதுகாப்புடன் தாதாக்களான காலா ஜத்தேடி, அனுராதா சவுத்ரி இடையேயான திருமண விழா ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. 

Night
Day