திருப்பதியில் இளைஞரை கடித்து கொன்ற சிங்கம் - உயிரியல் பூங்காவில் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை சிங்கம் ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளாக வருவது வழக்கம். இந்நிலையில், பூங்காவில் சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென ஒரு இளைஞர் ஏறி குதித்துள்ளார். அப்போது சிங்கம் ஒன்று அவரை தாக்கி கடித்த கொன்றது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவருடைய பெயர் பிரகலாத குப்தா என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

Night
Day