திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பு கை கடிகாரம் பரிசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கை கடிகாரங்கள் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று முன் தினம் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரை பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கை கடிகாரங்களை பரிசாக கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day