திருமண பந்தம் குறித்து கண்ணீர் மல்க பேசிய நீதா அம்பானி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்டின் திருமண நிறைவு விழாவில், நீதா அம்பானி கண்ணீர் மல்க பேசினார். உலக பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. கடந்த ஓராண்டாகவே திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், சடங்குகள் நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதா அம்பானி, திருமண பந்தம் குறித்து கண்ணீர் மல்க பேசினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். 

varient
Night
Day