திருவள்ளூவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டுகிறது - பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்றார். காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது என்றும், திருவள்ளூவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Night
Day