தி.காங்கிரஸின் முன்னாள் எம்.பி மொஹவா மொய்த்தராவுக்கு ED சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி மொஹவா மொய்த்தரா வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவையில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக கேள்வி கேட்க சில நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு மக்களவையில் இருந்து மொஹவா மொய்த்தரா நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த நிலையில் மக்களவை நெறிமுறை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மொஹுவா மொய்த்தரா தரப்பில் பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி  நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Night
Day