துபாயில் கண்ணீர் விடும் "கூலித்தொழிலாளி"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்ற கூலிதொழிலாளி ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவர் தனது குடும்பசூழல், வறுமையின் காரணமாக 2 லட்சம் ரூபாய் செலவு செய்து துபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின் அவருக்கு பாலைவனத்தில் தகரக் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள், வாத்துகள் ஆகியவற்றை பராமரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. அந்த இடத்தை சுற்றி பல கிலோமீட்டர் தொலைவு வரை ஆட்களோ, வீடுகளோ கிடையாது என கூறப்படுகிறது. எனவே பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் பாலைவனத்தில் தனிமையில் இருக்கும் சிவா, தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சிவாவை நிச்சயம் அழைத்து வருவோம் என உறுதியளித்துள்ளார். 

Night
Day