தெலங்கானாவில் வாட்டும் வெப்பம் : பீர் பாட்டிலுக்கு தட்டுப்பாடு - வாடும் குடிமகன்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் கோடை வெயில் வாட்டத்தொடங்கிய நிலையில் மதுபான கடைகளில் பீர் பாட்டில்கள் இல்லாததால் குடிமகன்கள் வாட்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். தெலங்கானாவில் அரசுக்கு பீர் பாட்டில்களை விற்ற நிறுவனங்களுக்கு, உரிய தொகையை செலுத்தாமல் இழுத்தப்படிப்பதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பீர் பாட்டில் விற்ற நிலையில், 100 கோடி ரூபாய் மட்டுமே அரசால் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு பீர் பாட்டில்கள் சப்ளை செய்வதை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. தற்போது கோடை வெயில் வாட்டத்தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு மிகவும் பிடித்த பீர் பாட்டில்கள் விற்பனைக்கு வராததால் குடிமகன்கள் வாட்டத்துக்கு ஆளானார்கள்.

Night
Day