தெலங்கானா சட்டமன்றத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தீர்மானம் தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசாவைத் தொடர்ந்து தெலங்கானா சட்டமன்றத்திலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தெலங்கானாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் தாக்கலானது. அதில் வீடு வீடாகச் சென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day