தெலங்கானா வெள்ளம் - காரில் தந்தை, மகள் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கிய காரில் பயணித்த தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர்.

கம்மம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்லால் என்பவரும் அவரது மகள் அஸ்வினி ஆகியோர் நேற்று வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு ஐதராபாத்தில் உள்ள சம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் நேற்று மாலை முதல் மோகன்லால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகூடம் அருகே  ஓடையில் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் மோகன்லாலின் கார் மூழ்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரின் கதவுகளை திறந்து பார்த்தபோது அதில் மோகன்லால், அஸ்வினி இருவரும் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. ஐதராபாத்தில் தரைப்பாலத்தை கடந்து சென்றபோது ஆர்ப்பரித்து ஓடிய தண்ணீரில் அவரது கார் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இருவரும் இறந்திருக்‍கலாம் என்று கருதப்படுகிறது.

Night
Day