தெலங்கானா : பொதுமக்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில், அரசு நிலத்தில் விதிமீறி கட்டடம் கட்டுவதை தட்டிக்கேட்ட பொதுமக்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ வெளியாகி உள்ளது. கரீம்நகர் மாவட்டம் ஜம்மிகுண்டா மண்டலம் ராமனப்பள்ளியில் அரசு நிலத்தில் சிலர் விதிமீறி கட்டடம் கட்டுவதாக அப்பகுதியை சேர்ந்த மல்லண்ணா, ராஜு, ரமேஷ் ஆகிய 3 பேர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த ரவி என்ற நபர் இரும்பு கம்பியால் சரமாரியாக அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த மல்லண்ணா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day