தெலங்கானா: கடனை திருப்பி தராததால் ரூ.4 கோடி மதிப்பிலான லம்போர்கினி காருக்கு தீ வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் 2 கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் என்பவர் தனது லம்போர்கினி காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அகமது என்பவர் தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், காரை விற்பனை செய்ய முயற்சித்ததால் ஆத்திரமடைந்து பெட்ரோலை ஊற்றி காரை எரித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர். 

Night
Day