தெலங்கானா: காசிபேட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹனுமகோடா மாவட்டத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையத்தில் பழுது நீக்குவதற்காக ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த, ரயிலின் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். பயணிகள் யாரும் ரயிலில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day