தெலங்கானா: பிஆர்எஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நல்கொண்டாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற லாஸ்யா நந்திதா, காரில் வீடு திரும்பினார். ஹைதராபாத்தில் உள்ள படான்செருவு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது. இதில் படுகாயமடைந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் நேர்ந்த விபத்தில் சிக்கி உயிர் தப்பிய நிலையில், இன்று நிகழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 19ம் தேதி லாஸ்யா நந்திதாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இன்று அவரும் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day