தெலங்கானா: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த 30 குரங்குகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த 30 குரங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நலகொண்டா மாவட்டம் நந்தி கொண்டா நகராட்சியின் முதலாவது வார்ட்டில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்த்துள்ளனர். அப்போது அதில் 30 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குரங்குகளை அப்புறப்படுத்திய ஊழியர்கள், குரங்குகள் இறந்ததுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day