தெலுங்கு தேசம் கட்சி ஏஜெண்டுகள் மண்டை உடைந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெண்டல கிராமத்தில் வாக்கு சாவடி அருகே தெலுங்கு தேசம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் முகவர்கள் இருவரை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தடியால் அடித்ததில் அவர்களின் மண்டை உடைந்தது. மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day