தேர்தலில் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் பணிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல் உள்ளிட்ட எவ்வித செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்றும், அரசியல் தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பேரணி வாகனங்களில் ஏற்றுவது போன்றவற்றை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. 

Night
Day